என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    X

    பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    • 24-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டந்தோறும் துறைவாரியாக பல் வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழக அரசு நடவ டிக்கை எடுத்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கள் நடத்தப்பட உள்ளது.

    இந்தமுகாம்களில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்த பரிசோ தனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    இந்தமுகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவல கத்தில் நேற்று நடந்தது.

    அதில் ஏழை, எளிய மக்கள் பயன்பெ றும் வகையில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்டபீஞ்சமந்தை அரசு உயர்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்கர் அரசு உயர்நிலைப் பள்ளி என 2 இடங்களில் மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா, இணை இயக்குனர் (நல பணிகள்) பாலசந்தர், துணை இயக்குனர் (பொதுசுகாதாரம்) பானுமதி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கண் காணிப்பாளர்ரவிதிலகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×