என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்
    X

    குடியாத்தம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடந்தது

    ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்

    • குடியாத்தம் ஒன்றியத்தில் நடந்தது
    • 15-வது நிதி குழு பணிகள் குறித்து கலந்துரையாடல்

    குடியாத்தம்,

    வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியமான குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அதிகாரிகள் கலந்து கொண்ட 15 நிதிக்குழு மானியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் கே.கே.வி. அருண்முரளி, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மமதாஇமகிரிபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், தமிழ்வாணன், தமிழ்மாறன், பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.பி.சுப்பிரமணி, அகிலாண்டேஸ்வரி, எஸ்.பி. சக்திதாசன், பி.கே.குமரன், துளசிராமுடு, முனிசாமி, சாந்திமோகன், லாவண்யா ஜெயப்பிரகாஷ் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×