என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அருகே காரியமேடை கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
காரியமேடை கட்ட எதிர்ப்பு
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் ராஜாகோயில் குட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் காரியமேடை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்பகுதியில் காரியமேடை கட்டக்கூடாது எனவும் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இங்கு காரியமேடை கட்டப்பட்டால் பலருக்கும் சவுகரியமாக இருக்கும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து காரியமேடை கட்டும் பணி தடைப்பட்டது.
பிரச்சினை குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர். திருமலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மேலாளர் அசோக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சோபன்பாபு ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், துணைத்தலைவர் ராஜாத்திதமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி துணை தலைவர் காந்திபிரசாத், ஊராட்சி மன்ற உறுப்பினர் காந்தி, கிராம நிர்வாக அலுவலர் ரகு உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஒரு தரப்பினர் அதே இடத்தில் காரியமேடை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர் மற்றொரு தரப்பினர் அப்பகுதியில் காரியமேடை கட்டக்கூடாது என வலியுறுத்தினர் இதனால் சுமூக முடிவு ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில் இப் பிரசசினை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு காரியமேடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.






