என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி- சித்தூர் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
- கதிர் ஆனந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார்
வேலூர்:
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் துணை மேயர் சுனில் குமார் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு துணை மேயர் சுனில் குமார் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் பொது மக்களுக்கு ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, இளநீர், குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார்.
Next Story






