search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாராயணி பீடத்தில் சரஸ்வதி யாகம்
    X

    சக்தி அம்மா மாணவர்களுக்கு பேனா வழங்கிய காட்சி. 

    நாராயணி பீடத்தில் சரஸ்வதி யாகம்

    • கல்வியால் மட்டுமே ஒருவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும்
    • சக்தி அம்மா பேச்சு

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்காக சக்தி அம்மா தலைமையில் சிறப்பு சரஸ்வதி யாகம் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்க ளுக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து மாணவர்க ளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாணவர்களாகிய உங்களுக்கு பிடித்த சினிமா ஹீரோ ஒருவராவது இருப்பார். ஆனால் அவர்கள் நிஜத்தில் ஹீரோ இல்லை. நீங்கள் தான் நிஜ ஹீரோ. தன்னைப்போல் மற்றவர்களையும் உயர்த்த நினைப்பவர்கள் யாரோ அவர்கள் தான் நிஜ ஹீரோ. சமுதாயத்தில் கல்வியால் மட்டுமே ஒருவரை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.

    நன்மை செய்ய முடியும். வாழ்க்கையின் முன்னேற்ற த்திற்கு கல்வி தேவை அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக வர வேண்டும் படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மற்றவைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

    தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த யாகத்தின் மூலம் சரஸ்வதி தேவியின் சக்தி இந்த பேனாவில் இறக்கப்ப டுகிறது. போருக்குச் செல்லும் வீரருக்கு ஆயுதம் தேவைப்படுவது போல் தேர்வு எழுத செல்லும் உங்களுக்கு இந்த பேனா ஆயுதமாக இருக்கும்.

    கடைகளில் இருக்கும் போது இது ஒரு சாதாரண பேனா. ஆனால் பூஜை செய்த பிறகு சரஸ்வதி தேவியின் பூரண சக்தி கிடைத்து உள்ளது. இதனால் அரிய சக்தி கிடைத்து மகா சரஸ்வதி தேவி உங்களுக்கு துணையாக இருப்பார்.

    இதனால் தேர்வு எழுதும் போது உங்களுக்கு பதட்டம் வராது. சிறப்பான முறையில் தேர்வு எழுதி நல்ல நிலையை அடைந்து நீங்களும் உயர்ந்து உங்களை சார்ந்தவர்களையும் முன்னேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×