என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் மர்ம சாவு
- தூக்கில் பிணமாக மீட்பு
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கரடிகுடி அருகே உள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 60).
இவர் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். அதன்படி இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார்.
பிரகாஷ் கடன் கொடுத்தவர்களிடம் சென்று, பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ஒருசிலர் பணத்தை திரும்ப தர காலம் தாழ்த்தி வந்தனர்.
மேலும் ஒருசிலர் பணத்தை கொடுக்கமுடியாது எனவும் பிரகாசுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பிரகாஷ், அவரது விவசாய நிலத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






