search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம்
    X

    ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம்

    • பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்
    • குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பங்கேற்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமா ள்ராஜா அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்புதுறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது.

    மேலும் ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து வருகை தந்து இருந்த அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எடுத்துரைத்து பேசினார்கள். இதில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×