என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் கடைகளுக்கு நோட்டீஸ்
- ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
- அதிகாரிகள் நடந்து சென்று ஆய்வு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் முதல் கிரீன் சர்க்கிள் வரையிலான பகுதி வரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது , சாலையை ஒட்டிய பகுதியில் பொது மக்களுக்கும், போக்குவ இடையூறு ரத்துக்கும் ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தி வைத் திருந்தது, தனியார் நிறுவ னத்தினர் தங்கள் வாக னங்களை நிறுத்தி அவர்கள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்வது, டீக் கடைகள் தள்ளுவண்டி ஆகியவை கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது ஆகியவற்றை கண்டு பிடித்தனர்.
இவற்றை, அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி கிரீன் சர்க்கிள் முதல் அல மேலு மங்காபுரம் வரை யிலான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், ஒரு வாரத்துக்குள் ஆக்கி ரமிப்பு அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட் சத்தில் அடுத்த வாரம் முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என குறிப் பிடப்பட்டிருந்தது.