search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பைக் வாங்கி தந்ததால் அண்ணன் தற்கொலை
    X

    பழைய பைக் வாங்கி தந்ததால் அண்ணன் தற்கொலை

    • தம்பிக்கு புதிய வாகனம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பொன்னையை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் நவீன் குமார் (வயது 25).இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளானார் இந்த நிலையில் இவருடைய தம்பிக்கு பெற்றோர் புதிய பைக் வாங்கி கொடுத்தனர்.

    ஆனால் நவீன் குமாருக்கு பழைய பைக் வாங்கி தந்தனர். இது குறித்து நவீன் குமார் வீட்டில் தகராறு செய்தார். மேலும் மனமுடைந்த அவர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பொன்னை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×