என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் வாலிபர் பிணம் மீட்பு
    X

    கிணற்றில் வாலிபர் பிணம் மீட்பு

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாயமானார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா பின்னத்துறையை அடுத்த கொல் லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் ராஜசேகர் (வயது 20). இவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. இது தொடர்பாக பெரியண்ணன் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அங்கிருந்த விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு வாலிபர் உடல் கிடந்ததை சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை, ஒடுகத்தூர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்டு விசாரணை நடத் தினர். விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் காணா மல்போன ராஜசேகர் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வேப்பங்குப்பம்போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் கால் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×