என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கியாஸ் ஊழியர்களை தாக்கியவர் கைது
    X

    கியாஸ் ஊழியர்களை தாக்கியவர் கைது

    • வண்டியின் கண்ணாடியை உடைத்து ரகளை
    • ெஜயிலில் அடைத்தனர்

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் இருந்து தனியார் கியாஸ் வாகனம் ஆசனாம்பட்டு பகுதியில் வந்துகொண்டு இருந்தது.

    இதன்பின்னால் பைக்கில் வந்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜிகுமார் என்பவர் வேகமாக சென்று கியாஸ் வாகனத்தை இடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாகனத்தில் இருந்த ஊழியர்கள் தட்டி கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த வாலிபர் அருகே இருந்த உருட்டு கட்டையை எடுத்து வண்டியின் கண்ணாடியை உடைத்து விட்டு 2 ஊழியர்களை கட்டையால் தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த ஊழியர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்களை தாக்கிய விஜிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×