என் மலர்
உள்ளூர் செய்திகள்

துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி. சக்தி அம்மா புனித நீர் ஊற்றி வழிபட்டார்.
ஸ்ரீநாராயணி பீடத்தில் துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- சக்தி அம்மா பங்கேற்பு
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் நாராயணி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீதுர்கை அம்மன் புதுப்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் இந்து பூர்ணாஹூதி நடைபெற்து. பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கலசநீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
சக்தி அம்மா கலந்து கொண்டு துர்கை அம்மன் சிலை மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
இதே போன்று நாராயணி அம்மன் பழைய கோவில் கோபுர கலசம் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது . நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்குமார், மேலாளர் சம்பத் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.






