search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடியை கொல்ல முயன்றதை தடுத்த வேலூர் போலீசாருக்கு பாராட்டு
    X

    ரவுடியை கொல்ல முயன்றதை தடுத்த வேலூர் போலீசாருக்கு பாராட்டு

    • 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரே பறிமுதல்
    • பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மத்திய ஜெயிலில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ரவுடி மதுரை பாலா (வயது 35) என்பவரை வேலூர் ஆயுதபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    அப்போது அவரை அங்கு 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரேயை அடித்துவிட்டு பாலாவை கொலை செய்ய முயன்றனர். எனினும் போலீசார் பாலாவை காப்பாற்றினர். தப்பியோடியவர்களை 5 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர்.

    அப்போது போலீஸ்காரர்கள் பாரதி, பிரசாந்த், வெங்கடேசன் ஆகியோர் 3 பேரை பிடித்தனர். பாரதி என்பவருக்கு கையில் வெட்டு விழுந்தது.

    பிடிபட்டவர்களிடம் இருந்து 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரேவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணியின் போது திறம்பட செயல்பட்ட போலீசாரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    Next Story
    ×