என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரவுடியை கொல்ல முயன்றதை தடுத்த வேலூர் போலீசாருக்கு பாராட்டு
- 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரே பறிமுதல்
- பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மத்திய ஜெயிலில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ரவுடி மதுரை பாலா (வயது 35) என்பவரை வேலூர் ஆயுதபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரை அங்கு 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரேயை அடித்துவிட்டு பாலாவை கொலை செய்ய முயன்றனர். எனினும் போலீசார் பாலாவை காப்பாற்றினர். தப்பியோடியவர்களை 5 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர்.
அப்போது போலீஸ்காரர்கள் பாரதி, பிரசாந்த், வெங்கடேசன் ஆகியோர் 3 பேரை பிடித்தனர். பாரதி என்பவருக்கு கையில் வெட்டு விழுந்தது.
பிடிபட்டவர்களிடம் இருந்து 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரேவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணியின் போது திறம்பட செயல்பட்ட போலீசாரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்