என் மலர்
உள்ளூர் செய்திகள்

மைனர் பெண்ணை கடத்தி திருமணம்
- வாலிபர் கைது
- வேலூர் சிறையில் அடைத்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இவரது 17 வயது மகள் பிளஸ்-1 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார்.
இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் பஸ்சுக்காக காத்திருந்த அந்த சிறுமி மற்றும் உடன் இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் செருவங்கி தனலட்சுமி நகரைச் சேர்ந்த சேகர் மகன் அசோக் குமார் (வயது 27) எலக்ட்ரீசியன் வேலை செய்து வருபவர் என்பதும் இவர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று ரத்தனகிரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.






