search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை அடகு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களுக்கு வலைவீச்சு
    X

    நகை அடகு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களுக்கு வலைவீச்சு

    • 2 பேரிடம் விசாரணை
    • பணம் தர மறுத்ததால் ஆத்திரம்

    வேலூர் :

    வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் முகேஷ் குமார் அவரது வீட்டை ஒட்டியே நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை இவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.இதுகுறித்து தகவல் அறிந்து சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முகேஷ்குமாரிடம் மர்ம நபர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் பணம் தர மறுத்ததால் அவரது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×