search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் அரசு பஸ் சிறை பிடிப்பு
    X

    பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    வேலூரில் அரசு பஸ் சிறை பிடிப்பு

    • பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் ஆத்திரம்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடர்மழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.நீர் வெளியேற வழியின்றி தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து எழுந்து வகுப்பறைக்கு செல்கின்றனர்.

    மேலும் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளதால் பாம்பு தேள் உள்ளிட்டவைகள் வகுப்பறைக்குள் வருகின்றன.

    மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அவரது பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கவுன்சிலர் த.பாபு, ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர்.

    பள்ளி வளாகத்தில் தேங்கி இருந்த மழை வெள்ளம் பொக்லைன் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மண் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×