என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் வளர்த்த மண்ணுளி பாம்பு மீட்பு
- ஒருவர் கைது
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுதுத்த வெங்கனபாளையம் பகுதியில் மண்ணுளி பாம்பை ஒருவர் சட்டவிரோதமாக வளர்த்து வருவதாக வனத்து றையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாபு (வயது50) என்பவரின் வீட்டில் பிளாஸ்டிக் பேரலில் மணலில் வைத்து இருந்த 3 அடி நீளமும் சுமார் 4 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணத்திற்கு ஆசைப்பட்டு சில மாதங்களாக உணவு கொடுத்து மண்ணுளிப் பாம்பை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட மண்ணுளிப் பாம்பை அருகே இருக்கும் பருவமலை காப்பு காட்டில் பத்திரமாக வனத்துறையினர் கொண்டுபோய் விட்டனர். சட்ட விரோதமாக பாம்பை பிடித்து வளர்த்து வந்த பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.






