search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி
    X

    லாரி மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி

    • ஹெல்மெட்டையும் தாண்டி அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • பணிக்கு வந்தபோது பரிதாபம்

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள வல்லண்டராம் வசந்தம் நகரை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 33) கொணவட்டம் போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பைக்கில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    மேல்மொணவூர் வங்கி அருகே வந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் பரந்தாமன் அணிந்திருந்த ஹெல்மெட்டையும் தாண்டி அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரந்தாமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×