என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
    X

    குடியாத்தத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்த காட்சி.

    குடியாத்தத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் நடந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சில இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மறுநாளே கரைக்கப்பட்டது. பெரும்பாலான விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் நெல்லூர் பேட்டையில் ஏரியில் கரைக்கும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.

    குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது நேற்று முன்தினம் குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலின் அருகில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமா சென்று நெல்லூர் பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டது

    2-வது நாளாக நேற்று குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8அடி முதல் 15 அடி உயரத்தில் ஆன விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று இரவு நெல்லூர் பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டது.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் நகரில் உள்ள பல்வேறு விநாயகர் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.நகரின் முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×