search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடையில் பறக்கும் படை தாசில்தார் திடீர் ஆய்வு
    X

    ரேசன் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    ரேசன் கடையில் பறக்கும் படை தாசில்தார் திடீர் ஆய்வு

    • தொடர்ந்து புகார்கள் வந்ததால் நடவடிக்கை
    • பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க அறிவுரை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது.

    இந்த ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் இந்த ரேசன்கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ஏ.கோடீஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் தரமற்ற முறையில் பல மாதங்களாக ரேசன் அரிசி வழங்கப்படுவதாகவும் இதனால் பலர் ரேசன் அரிசி வாங்காமல் திரும்பிச் செல்வதாகவும் குற்றம் சாட்டினர்.

    அதிகாரிகள் ரேசன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக கிடங்கள் இருந்து வந்தால் உடனடியாக அதனைக் கிடங்கிற்கு திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் லாவண்யாகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×