search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை குறைந்ததால் பாலாற்றில் நீர்வரத்து சரிவு
    X

    மழை குறைந்ததால் பாலாற்றில் நீர்வரத்து சரிவு

    • இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது
    • பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது

    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வந்த தொடர் மழை குறைந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது.

    வேலூரில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,400 கனஅடி வரை இருந்த நீர்வரத்து சனிக்கிழமை 1,100 கனஅடிக்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந் தது. இதனால், முக்கிய ஆறு கள், ஓடைகளில் நீர்வரத்து ஏற் பட்டுள்ளது.

    இதேபோல், தமிழகத்தையொட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது.

    திருப்பத்தூர்,வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, வாணியம்பாடி அரு கேயுள்ள மண்ணாறு, கல்லாற்றில் இருந்து தலா 100 கன அடி தண்ணீர் பாலாற்றுக்கு வந்து கொண்டிருந்தது. மேலும், மலட்டாற்று, வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன்மூலம், பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் வெள்ளிக் கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,400 கனஅடியாகவும், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 1,500 கன அடியாகவும் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது.

    இந்த நிலையில், வெள்ளி, சனிக்கிழமை மழை பொழிவு குறைந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத் தும் சரிந்து காணப்பட்டது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும், ஆந்திர வனப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது.

    தற்போது மழை நின்றுவிட்டதால் படிப்படியாக நீர்வரத்து சரிந்துள்ளது.

    தவிர, தற்போது பெய்திருப் பது பருவமழை இல்லை. வடகி ழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்திலேயே தொடங்கக்கூடும். எனினும், திடீர் மழை காரணமாக பாலாற்றிலும், துணை ஆறுகளிலும் வரும் வெள்ளத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×