search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.ஐ.ஜி., எஸ்.பி. தலைமையில் சாராய வேட்டை
    X

    டி.ஐ.ஜி., எஸ்.பி. தலைமையில் சாராய வேட்டை

    • 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்
    • 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுப்பிடித்து அழித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்ணன், ஏ.எஸ்.பி. பாஸ்கரன். ஆகியோரின் தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அல்லேரி, அத்திமரத்துக்கொல்லை, பலாமரத்தூர், நெல்லிமரத்துக்கொள்ளை உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், 1000 லிட்டர் சாராயம் கண்டுப்பிடித்து அழித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த விஜய்குமார் (வயது 34) மற்றும் விஜயகாந்த் (வயது 22) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மலைப்பகுதியில் சாராயம் யார் காய்ச்சுவது என்பதை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×