என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தாறுமாறாக லாரியை ஓட்டிய டிரைவருக்கு தர்ம அடி
    X

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தாறுமாறாக லாரியை ஓட்டிய டிரைவருக்கு தர்ம அடி

    • மயங்கி விழுந்ததால் பரபரப்பு
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் இருந்து ஆற்காடு ரோட்டிற்கு வரும் வாகனங்கள் பழைய பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து மண்டி தெரு வழியாக செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கணியம்பாடி அருகே உள்ள கத்தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 35). என்பவர் மினி கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார்.

    அவர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தவுடன் லாரியை பின்னோக்கி தாறுமாறாக ஓட்டினார். இதில் பஸ் நிலையத்தை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது லாரி மோதி சேத மடைந்தன.

    இதனை கண்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்ச லிட்டனர். அப்போதும் லாரி டிரைவர் கண்டு கொள்ளாமல் அங்கும் இங்குமாக நகர்த்தினார்.இதனால் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் லாரி டிரைவரை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த லாரி டிரைவர் பழனி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இந்த களேபரம் நடந்து முடியும் வரையிலும் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட வில்லை. லாரி டிரைவர் மயக்கமடைந்தால் அவரை தாக்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் பழனியை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போதுதான் அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் நேற்று இரவு பழைய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

    Next Story
    ×