என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழைத்தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு
    X

    குடியாத்தம் அருகே வாழைத் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளுடன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி.

    வாழைத்தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு

    • எஸ்.பி.க்கு வந்த வாட்ஸ்-அப் தகவல் மூலம் நடவடிக்கை
    • 2 கி.மீ. தூரம் நடந்து சென்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கலர்பாளையத்திலிருந்து பெரும்பாடி ஏரி கரை மீது சென்று சுமார் இரண்டு கிலோமீட்டர் சேரும் சகதியுமான பாதையை தாண்டிச் சென்றால் ஒரு விவசாய நிலத்தில் வாழைத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள தாக பெயரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மற்றும் அதிரடி படையினருடன் நேற்று மாலையில் கொட்டும் மழையில் எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெரும்பாடி ஏரிக்கரையின் மீது சென்று அங்கிருந்து உசேரும் சகதியுமாக உள்ள ஒத்தையடி பாதையில் மிகவும் சிரமப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று குழுவினருடன் ஆய்வு செய்தபோது கஞ்சன் என்கிற முனியப்பன் என்பவருடைய வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டு அதிர்ச்சடைந்தார் உடனடியாக அதிரடிப்படையினருடன் வாழைத்தோட்டத்தில் தீவிர சோதனை செய்தபோது சுமார் ஒன்றரை அடி உயரம் முதல் 4 அடி உயரம் வரை வளர்ந்துள்ள 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது-கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் வாட்ஸ் அப் எண் 9092700100 என்ற எண்ணை அறிமுகம் செய்தோம் அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்து ஏராளமான ரகசிய தகவல்கள் வரப்பட்டன.

    அந்த தகவல்களின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக சோதனை செய்து கஞ்சா விற்பவர்கள், கடத்திச் செல்பவர்கள் மற்றும் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை கடத்திச் செல்பவர்கள் விற்பவர்கள் என தொடர்ந்து கைது செய்யப்பட்டு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    போலீசார் தெரிவித்த வாட்ஸ் அப் எண்ணின் பலனாக குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கலர் பாளையத்திலிருந்து பெரும்பாடி ஏரிக்கரை தாண்டி ஒரு விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக அதில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து சாதாரண சீருடையில் தனிப்படை போலீசார் புகார் வந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு கஞ்சா பயிரிடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காலதாமதம் செய்யாமல் விரைந்து சென்று கொட்டும் மழையும் பார்க்காமல் மோட்டார் சைக்கிலை சென்று அந்த நிலத்திற்கு சென்று பார்த்தபோது வாழைத் தோட்டத்தில் 40 கஞ்சா செடிகள் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்த நிலத்தின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போல் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×