என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    குடியாத்தத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு ஒன்றிய செயலாளர்கள் டி. சிவா, சீனிவாசன், பிரபாகரன், சுரேஷ்பாபு, ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்திஆகியோர் முன்னிலை வகித்தனர்.குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி வரவேற்றார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு, வி என். தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் உள்பட நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×