என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 ஆயிரம் போலீசார் விடிய விடிய கண்காணிப்பு
- வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீவிரம்
- முக்கிய சந்திப்புகளில் ரோந்து
வேலூர்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
கேரளா கர்நாடகா தமிழகம் மத்திய பிரதேசம் உட்பட 15 மாநிலங்களில் இந்த சோதனை நடந்தது. மொத்தம் 93 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையை தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று இரவு அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் போலீசார் ேராந்து சென்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக சுற்றிய நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலையில வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.






