என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி சாலையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி
- பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர்கள்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு 3 வாலிபர்கள் பைக்கை நிறுத்தினர்.
பின்னர் அதன் மீது கேக்கை வைத்து அதை பட்டாகத்தியை கொண்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
மேலும் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபருக்கு ஆளுயர பூ மாலை அணிவித்து, சரவெடிகளை கொளுத்தி நடுரோட்டில் வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிகவும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நள்ளிரவில் கையில் பட்டாசு, பட்டா கத்தியுடன் நின்று கேக் வெட்டி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






