என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் வளத்தை அதிகரித்தால் பயிர்கள் செழித்து வளரும்
    X

    மண் வளத்தை அதிகரித்தால் பயிர்கள் செழித்து வளரும்

    • விவசாயிகள் தொழிற்நுட்பத்தினை கடைபிடித்து பயன்பெறலாம்
    • வேளாண் அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தேன்மொழி கூறியதாவது;-

    நிலத்தின் நலம் மற் றும் வளம் அதில் சாகு படி செய்யும் பயிருக்கு ஏற்ப மாறுபடும். அதை அப்பயிரின் வேரைச்சுற் றியுள்ள மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் அள வைப் பொறுத்து கணிக் கலாம்.

    மேலும் இயற்கை முறையில் மண்ணின் வளத்தை அதிகரிக்க பல தானிய விதைப்பு செய்து அதை அந்த நிலத்திலேயே மடித்து உழவு செய்து மண் வளத்தை அதிகரிக்கலாம். அதற்கு ஒரு ஏக்கர் நிலத் திற்கு அனைத்து வகை பயிரிலும் சேர்த்து 25 கிலோ தானியங்களை எடுத்து கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.

    அதாவது பய றுவகை பயிர்களான தட்டைபயறு, மொச்சை, அவுரி, கொழிஞ்சி ஆகிய வற்றில் தலா 2 கிலோ வீதம் 8 கிலோவும், தானிய வகை பயிர்கள் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோ ளம் ஆகியவற்றில் தலா 2 கிலோ வீதம் 8 கிலோவும், எண்ணெய் வித்து பயிர்கள் ஆமணக்கு, நிலக்கடலை, எள் இவை களில் தலா 2 கிலோ வீதம் 6 கிலோவும், நறுமணப் பயிர்களான கொத்தமல்லி, கடுகு, பெருஞ்சீரகம் இவைகளில் தலா 700 கிராமும், கடலை பிண்ணாக்கு 40 கிலோ மற் றும் வேப்பம் பிண்ணாக்கு 60 கிலோ சேர்த்து நிலத்தில் மடித்து உழவு செய்வதன் மூலம் அனைத்து வகை யான சத்துக்களையும் பயிர் களுக்கு கிடைக்க செய்ய லாம்.

    இதனால் மண்ணின் கரிமச்சத்து அதிகரிப்பதா லும் மண்ணின் காற்றோட் டம் அதிகரிப்பதாலும் மண்ணில் உள்ளநுண்ணு யிரிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு அதிகளவு மணிச்சத்தை பயிருக்கு கிடைக்க வழி வகை செய்கிறது.

    இதனால் பயிரின் வேர் வளர்ச்சி தூண்டப் படுவதால் பயிர் நன்கு செழித்து வளர்வதுடன் நல்ல மகசூல் கிடைக்கும். மேலும் வறட்சியை தாங்கி வளர வழிவகை செய்கி றது. எனவே இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உள்ள விவசாயிகள் தொழிற்நுட்பத்தினை கடைபிடித்து பயன்பெற லாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×