என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் 9 பேருக்கு கொரோனா
- முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை வலியுறுத்தல்
- கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எனினும் மக்களிடையே கொரோனா தொற்று பரவல் இருந்து வரு கிறது.
வேலூருக்கு தினமும் வெளிமாநிலங்களில் இருந்து பலர் சிகிச்சைக்கு வருவதால் அவர்கள் மூலமாக தொற்று பரவல் இருந்து வருவதாக தெரிகிறது. இதை தடுக்க கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று வெளியான பரிசோ தனை முடிவில் வேலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் 7 பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story






