என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு கொலை வழக்கு குற்றவாளி
- வேலூர் கோர்ட்டில் சரண்
- நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்
வேலூர்:
செங்கல்பட்டை சேர்ந்த லோகேஷ் என்ற ரவுடி கடந்த 6-ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டுக்கு வந்தார்.
அப்போது மர்ம நபர்கள் லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
லோகேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த விவேக்ராஜ் (வயது 20) என்பவர் இன்று வேலூர் கோர்ட்டிற்கு வந்து ஜேஎம் 4 நீதிபதி ரோஸ் கலா முன்பு சரணடைந்தார்.
Next Story






