என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் திடீர் ஆர்ப்பாட்டம்
- அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மத்திய மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்க தயங்கிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் ஸ்டேட் பாங்க் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் வட்டார தலைவர் வீராங்கன் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் எல்ஐசி அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் விஜயன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் பெரியசாமி, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் கிருபானந்தம், முகமது அராபத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் விஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் யுவராஜ், சரவணன், பாரத் நவீன்குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்பிரபு உள்பட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






