என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
குடியாத்தம் :
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குடியாத்தம் நகர, ஒன்றிய 23வது மாநாடு நடைபெற்றது.
கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணி கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் டி.ஆனந்தன், கே.சி.பிரேம்குமார், சித்ரா ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினர்.
இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கெங்கையம்மன் கோவில் தரை பாலத்தை போர்க்கால அடிப்படையில் மேம்பாலமாக கட்ட வேண்டும். ஆற்றோரம் நீர்நிலை பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் தரவேண்டும்.
வீடுகள் இடிக்கப்ப ட்டவர்களுக்கு மாற்று இடம் தரும் வரை மாதம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும்.
மோர்தானா அணையில் சுற்றுலா தளம் அமைக்க வேண்டும். குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை அனைவரும் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்