என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய குழு
    X

    வேலூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய குழு

    • வியாபாரம் ஆகக் கூடிய தன்மை அடிப்படையில் அறிக்கை தயார்செய்து வருகின்றனர்
    • கடைகள் அனைத்தும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதுப் பிக்கப்பட்டது.

    இதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்து, பஸ் போக்குவரத் தையும் தொடங்கி வைத்தார். அனைத்து பகுதிகளுக்கும் அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற் றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு 6 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன.

    அவற்றை தவிர மீதமுள்ள 72 அறைகள் கடை களாக மாற்றப்பட்டு கடந்த மாதம் 3 - ந்தேதி பொதுஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 - ந்தேதி திடீரென நிர்வாக காரணங்க ளால் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏலம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டது. அறைகளின் வாடகை அதிகமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை குறைப்பதற்காக ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

    ஏலம் விடாததால் பஸ் நிலையத்தில் கட்டப்பட் டுள்ள கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடக்கின்றன. அதனால் உணவகங்கள், டீ, காபி, குளிர்பான கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப் பாக பச்சிளங் குழந்தையின் பசியாற்ற பால், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை தேடி அலைந்து வாங்கும் நிலை காணப்படுகிறது. வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் பஸ்சில் இருந்து வேலூர் வழியாக செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் உணவகங்கள், டீக்கடைகள் இல்லாததால் பசியுடன் பயணம் செய்யும் அவலநிலை காணப்படுகிறது.

    பஸ் நிலையத்தின் வெளியே சென்று உணவு சாப்பிடும் பயணிகள் சில சமயங்களில் பஸ்சை தவறவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல் லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைகிறார்கள். இரவு நேரத்தில் குழந்தைகளு டன் வரும் பெண்கள், முதியவர்கள் அத்தியாவசிய பொருட்களை பஸ் நிலையம் வெளியே சென்று வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

    பஸ் நிலைய அமைவிடம் கடைகள் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு விதிமுறைப்படி ஒரு கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கடைகள் ஏலம் போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதனால் புதிய பஸ் நிலைய கடை வாடகை நிர்ணயம் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் புதிய பஸ் நிலையம் அமைவிடம் மற்றும் அங்கு வியாபாரம் ஆகக் கூடிய தன்மை ஆகியவை அடிப்படையில் அறிக்கை தயார் செய்து வருகின்றனர்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் கடைகளுக்கு வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதன் பிறகு ஏலம் விடப்படும். விரைவில் கடைகள் அனைத்தும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×