என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற துணிக்கடை ஊழியர் கைது
- ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றம்
- சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த டி.டி. மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் (வயது 19) குடியாத்தத்தில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த ஜவுளி கடையில் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அஜய்குமார் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுமியுடன் இருந்த அஜய்குமாரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அஜய் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி வேலூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






