என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் நகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி
    X

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

    குடியாத்தம் நகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி

    • செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    குடியாத்தம்:

    சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நகராட்சிகளின் வேலூர் மண்டல நிர்வாக இயக்குனர் பி.குபேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த செஸ் போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். குடியாத்தம் தாசில்தார் எஸ்.லலிதா, நகர்மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள்

    Next Story
    ×