என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் ஜெயில் கழிவறையில் பதுக்கிய செல்போன் பறிமுதல்
    X
    கோப்புப்படம்

    வேலூர் ஜெயில் கழிவறையில் பதுக்கிய செல்போன் பறிமுதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7-வது பிளாக் பகுதியில் ரோந்து
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சோதனைகள் செய்யப்படுகிறது.

    ஜெயில் வளாகத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையும் மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று ஜெயிலர் மோகன் குமார் என்பவர் 7-வது பிளாக் பகுதியில் ரோந்து சென்றார்.

    அங்குள்ள கழிவறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு ஒரு செல்போன் பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தனர். அதனை மோகன்குமார் பறிமுதல் செய்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×