search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகொண்டாவில் அனைத்து வார்டுகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்
    X

    பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் நடந்த போது எடுத்த போது படம்.

    பள்ளிகொண்டாவில் அனைத்து வார்டுகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்

    • பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சிறப்பு தீர்மானம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் மற்றும் செயல் அலுவலர் எஸ். உமாராணி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார் அதில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கல்வெட்டுகள் அமைத்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் 18 வார்டு பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

    பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மின்விளக்கு, குடிநீர் வசதி, சுகாதார வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் செய்து முடிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் கமலநாதன் அரவிந்தன் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×