என் மலர்
உள்ளூர் செய்திகள்

உ- முருகன் சந்திப்புக்கு தடை
- சிறை விதிகளை மீறி உண்ணாவிரதம் இருப்பதால் நடவடிக்கை
- ஜெயில் அதிகாரிகள் அறிவிப்பு
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் விதி களை மீறி உண்ணாவிர தம் இருந்து வருவதால் நளினி- முருகன் சந்திப் புக்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண் டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண் டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.
ஆனால் அவர் மீது சிறையில் செல் போன் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க சிறை நிர் வாகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் சிறை யில் உள்ள முருகன் கடந்த 8-ந்தேதி முதல் உண்ணா விரதம் இருந்து வருகிறார். கடந்த 11-ந் தேதி முதல் மவுன விரதமும் இருக்கி றார். தொடர்ந்து 8-வது நாளாக முருகன் உண்ணா விரதத்தை தொடர்ந்த தாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரது போராடத்தை கைவிட சிறைத்துறை அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால் அவர் பேச்சு வார்த்தையை தவிர்த்து உண்ணார விரத்தை தொடர்ந்து வருகிறார்.
அவரின் உடல் நலத்தை சிறை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரு கின்றனர்.
முருகனின் மனைவி நளினி பரோலில் வெளியே வந்து கடந்த 8 மாதங்களாக காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி யுள்ளார். இந்நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்ற உத்தரவின்படி முருகன், அவரது மனைவி நளினி சந்திப்பு நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது முருகன் சிறை விதிமுறைகளை மீறி உண் ணாவிரதம் இருந்து வருவதால் நளினியுடனான சந்திப்புக்கு தடை விதிக் கப்பட்டுள்ளதாக வேலூர் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






