என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் பால் கம்பம் நடப்பட்ட காட்சி.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் பால் கம்பம் நடப்பட்டது
- சிரசு திருவிழாவை முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் பால் ஊற்றி வழிபாடு
குடியாத்தம்:
தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.
கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 30-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14-ந்தேதி தேர் திருவிழாவும், மே மாதம் 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.






