என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு
    X

    விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

    • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
    • தீயணைப்பு படை‌ வீரர்கள் செயல் விளக்கம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தீ விபத்துகளை தவிர்க்கும் முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×