என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி
- பீர்பாட்டிலால் தாக்கினர்
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கானாறு தெருவை சேர்ந்தவர் தன்வீர் (வயது 20).இவர் நேற்று இரவு 10 மணி அளவில் பள்ளி கொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாபா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கும்பல் அவரை வழி மடக்கினர்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.
தன்வீர் பணம் செல்போன் தர மறுத்ததால் அவர்கள் பீர் பாட்டிலால் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயமடைந்த வாலிபர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளிகொண்டா தாபா அருகே மது போதையில் இருந்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கண்டிப்பாக வழிப்பறி கும்பல் பதிவாகி இருப்பார்கள். இதன் மூலம் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






