search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண ஏற்பாடு செய்யப்பட்ட இளம்பெண்-கல்லூரி மாணவி திடீர் மாயம்
    X

    திருமண ஏற்பாடு செய்யப்பட்ட இளம்பெண்-கல்லூரி மாணவி திடீர் மாயம்

    • போலீசார் விசாரணை
    • பால் வாங்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி இவருடைய மகள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த போது யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார் இதனைகண்ட அப்பா மகளை கண்டித்துள்ளார்.

    மேலும் இளம்பெண்ணிற்கு தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காலையில் பால் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அந்த பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்திலுள்ள உறவினர் வீடுகளிலும் தேடி கிடைக்காததால் இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    இதே போல் சின்னப்பள்ளி குப்பம் கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி அகரம் கூட்ரோட்டில் இருக்கும் அரசு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதன் சம்பந்தமாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×