என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயத்த ஆடை தயாரிக்க குழு அமைத்திட விண்ணப்பிக்கலாம்
    X

    ஆயத்த ஆடை தயாரிக்க குழு அமைத்திட விண்ணப்பிக்கலாம்

    • உபகரணங்கள் வாங்க அரசு ஆணை
    • கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும்.

    குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர் மிகப்பிற்பட்ட வகுப்பினர்,சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த (ஆண்/பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    பயனாளிகளுக்கான தகுதிகள்

    குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.

    குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் முதல்தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×