search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • ஜூன் 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கபட உள்ளது.

    விருது பெற தகுதிகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

    வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் சுய உதவிக்குழுக்கள், மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம். விருது பெறுவதற்கான விண்ணப்பத்தினை வருகிற ஜூன் 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துதல், குழுவின் சேமிப்பு தொகை முறையாக செலவிடப்படுதல், வங்கியில் கடன் பெறுதல், குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கை களில்ஈடுபடுதல், திறன் வளர்ப்பு பயிற்சி, வாழ்வாதாரம் சார்ந்த பயிற்சி மற்றம் சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகளை ஈடுபடுத்துதல் ஆகிய 6 காரணிகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்யப்படும் . மேலும் தகுதியான குழு தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×