என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.30.90 கோடியில் அம்ருத் குடிநீர் திட்ட பணிகள்
    X

    ரூ.30.90 கோடியில் அம்ருத் குடிநீர் திட்ட பணிகள்

    • அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்
    • ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சதிஷ்குமார் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    அதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் புதிய குடிநீர் பைப்லைன் அமைப்பது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.30.90 கோடியில் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூ ராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×