என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கொணவட்டம் அருகே விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.
லாரி மீது ஆம்புலன்சு மோதி நோயாளி பலி
- 3 பேர் காயம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 63). இவர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்சிஜன் உதவியுடன் சந்திரசேகரை இன்று அதிகாலை கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை அதிகாலை வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் தீ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சந்திரசேகர் இறந்தார். டிரைவர் உட்பட 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.
இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.






