search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் தர்ணா
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் தர்ணா

    • பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்க வலியுறுத்தல்
    • குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    அப்போது ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த வேண்டாமணி தனது மகனுடன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை சமரசம் செய்து அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர்.

    வேண்டாமணி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனர். எனக்கும், எனது கணவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் தற்போது எனது அம்மா வீட்டில் உள்ளேன்.

    இந்த நிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அதே பகுதியைச் சேர்ந்த வேறு பெண்ணை 2-து திருமணம் செய்து கொண்டார்.

    எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை அழைத்து விசாரணை செய்து, என்னுடன் அவரை சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×