என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் விழாவில் வாலிபருக்கு கத்தி வெட்டு
    X

    கோவில் விழாவில் வாலிபருக்கு கத்தி வெட்டு

    • கலை நிகழ்ச்சியின் போது நடனமாடுவதில் தகராறு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கல்லாபாறை கிராமத்தில் ஆண்டுகள் தோறும் தை மாதம் பெத்தபலி கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைப்பெறுவது வழக்கம்.

    இதே போல் நேற்று முந்தினம் திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது அதே ஊரை சேர்ந்த விக்னேஷ் (வயது 31), மற்றும் ஆனந்தன் (26) உட்பட சிலர் நடனமாடி கொண்டு இருந்தனர்.

    திடீரென் விக்னேஷ் மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கும் இடையே நடனமாடுவது குறித்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    இதனையடுத்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் தான் மறைத்து வைத்திருந்து கத்தியை கொண்டு விக்னேஷின் தலையில் வெட்டினார். இதில் படுகா யமடைந்த விக்னேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷ் கொடுத்த புகாரிப் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×