search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலபைரவருக்கு தேய்பிறை, வருடாந்திர நிறைவு விழா
    X

    காலபைரவருக்கு தேய்பிறை, வருடாந்திர நிறைவு விழா

    • 4 கால பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் எழுந்தருளி யுள்ள காலபைரவருக்கு வருடாந்திர நிறைவு விழா நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஏரி புதூர் கிராமத்தில் வனப்பகுதியின் அருகே காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு ஓராண்டுக்கு முன்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து தேய்பிறை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன, இதனையடுத்து நேற்று வருடாந்திர நிறைவு விழா நடைபெற்றது. இங்கு யாகசாலைகள் அமைத்து 9 கலசங்கள் வைத்து 4 கால பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

    இதையடுத்து 108 வகையான சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்த கலசத்தை கோவிலை சுற்றி வந்து மூலவருக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இதில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×