என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்த காப்புகாடு
- பலவகையான மூலிகை மரங்கள் நாசம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் காடுகளும், மலைகளும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு உள்ள காடுகளில் அரிய வகை மரங்கள், செடிகள் போன்றவை உள்ளது.
மர்ம நபர்கள் சிலர் வைக்கும் தீயால் அவை அழிவை சந்தித்து வருகிறது. அதே போல், இந்த காட்டு தீயால் வனவிலங்குகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர்.
இதனால், காடு கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. சுமார் 2 மணி நேரம் மலை முழுவதும் சுற்றி சுற்றி எரியும் தீயால் பலவகையான மூலிகை மரம் செடி,கொடிகள், வனவிலங்குகள் எரிந்தனர்.
இதனை வனத்துரை அதிகாரிகள் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், காட்டினால் நமக்கு கிடைக்கும் பயன்களை எடுத்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளன.
மேலும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை கொடுத்தால் மட்டுமே அடுத்த முறை யாரும் வனப்பகுதிக்கு தீ வைக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.






